தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: அறிமுக வீரர் மாத்ரே அதிரடி ஆட்டம்.. துபே, ஜடேஜா அரைசதம்! மும்பைக்கு எதிராக சிஎஸ்கே 176 ரன்கள் குவிப்பு

ஐபிஎல் 2025: அறிமுக வீரர் மாத்ரே அதிரடி ஆட்டம்.. துபே, ஜடேஜா அரைசதம்! மும்பைக்கு எதிராக சிஎஸ்கே 176 ரன்கள் குவிப்பு

Updated Apr 21, 2025 12:33 AM IST

google News
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை தந்தார். துபே, ஜடேஜா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதமடிக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 16 ரன்கள் குவித்துள்ளது. (AFP)
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை தந்தார். துபே, ஜடேஜா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதமடிக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 16 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை தந்தார். துபே, ஜடேஜா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதமடிக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 16 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 38வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் தனது முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதேபோல் சிஎஸ்கே அணி தனது முந்தைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இரு அணிகளும் தொடர் தோல்விக்கு பிறகு வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள நிலையில் அதை தொடர முயற்சிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே சேப்பாக்கத்தில் நடந்த முதல் மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதனால் மும்பை இந்தியன்ஸ் பழிதீர்க்க காத்திருக்கும் போட்டியாகவும் உள்ளது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ராகுல் திரிபாதிக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டுள்ளார். மாத்ரே அறிமுக ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மும்பை பவுலிங்

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஷிவம் துபே 50, ரவீந்திர ஜடேஜா, ஆயுஷ் மாத்ரே 32 ரன்கள் அடித்தனர்.

மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் தீபக் சஹார், அஸ்வனி குமார், பும்ரா, சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ஆயுஷ் மாத்ரே அதிரடி

சிஎஸ்கே அணியின் ஓபனர் ரச்சின் ரவீந்திரா 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய அறிமுக வீரரான ஆயுஷ் மாத்ரே தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டினார். அடுத்தடுத்து பவுண்டரி , சிக்ஸர்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.

4 பவுண்டரி, 2 சிக்ஸர் என 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த ஆயுஷ் மாத்ரே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு ஓபனரான ஷேக் ரஷீத் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

துபே - ஜடேஜா அபாரம்

அடுத்தடுத்து சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஷிவம் துபே - ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விக்கெட் சரிவை தடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். ஒரு பக்கம் துபே அதிரடி காட்ட, ஜடேஜா அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்தார்.

ஆரம்பத்தில் மெதுவாக ஸ்கோர் குவித்த துபே, பின்னர் கியரை மாற்றி 30 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்த துபே, 50 ரன்னில் அவுட்டானார்.

இதன் பின்னர் ஜடேஜா நிதானத்தில் இருந்து மெதுவாக அதிரடிக்கு மாறினார். கடைசி ஓவர் வரை நிலைத்து நின்று பேட் செய்த ஜடேஜா 34 பந்துகளில் அரைசதமடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 4 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். கடைசி அவரை அவுட்டாகாமல் இருந்த ஜடேஜா 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தார். தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார். முதல் 10 ஓவரில் 70 ரன்கள் எடுத்த சிஎஸ்கே, அடுத்த 10 ஓவரில் 106 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் போல்ட் 4 ஓவர்களில் 43 ரன்களை வாரி வழங்கி விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்தவில்லை. அதேபோல் ஸ்டிரைக் பவுலர்களான பும்ரா 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து துபே, தோனி என இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் ஸ்பின்னர் சாண்ட்னர் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.