ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுடன் மீண்டும் இன்று மோதல்.. பதிலடி கொடுக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
Published Apr 20, 2025 05:40 AM IST

ஐபிஎல் 2025: இதுவரை இரு அணிகளும் 34 மேட்ச்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 18 மேட்ச்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 16 மேட்ச்களில் ஆர்சிபியும் ஜெயித்துள்ளது.
ஐபிஎல் 2025: ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் 2025 இன் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. நேற்று நடந்த இரு அணிகளுக்கு இடையிலான மேட்ச்சில் மழை குறுக்கிட்டதால், 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த மேட்ச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி கண்டது.
இந்நிலையில், மீண்டும் இரு அணிகளும் மோதவுள்ளன. சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்த ஆர்சிபி, தற்போது பஞ்சாப் அணியை வெளியூரில் சந்திக்கிறது. வெளியூரில் ஆர்சிபி சிறப்பாகவே இந்த சீசனில் செயல்பட்டு வருவதால் இந்த மேட்ச்சில் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் குறைந்த ஸ்கோரை பதிவு செய்து கேகேஆர் அணியை வீழ்த்தி பக்கா ஃபார்மில் உள்ளது. நேற்றைய மேட்ச்சில் ஆர்சிபியை வீழ்த்தி அமர்க்களப்படுத்தியுள்ளது. இதுவரை 5 மேட்ச்களில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் வென்று கெத்து காட்டி வருகிறது.
ஆர்சிபி அணியே 4 மேட்ச்களில் வென்று 3 இல் தோல்வியைச் சந்தித்துள்ளது. புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னால் தான் இருக்கிறது ஆர்சிபி.
பிட்ச் ரிப்போர்ட்
முல்லன்பூரில் உள்ள ஆடுகளம், சீசனின் இரண்டு வலுவான பேட்டிங் அணிகளுக்கு இடையே அதிக ஸ்கோரிங் வாய்ப்புள்ள போட்டியை தொடர்ந்து வழங்கும் என எதிர்பார்க்கலாம். இது ஒரு சில வறண்ட பகுதிகளை மட்டுமே கொண்ட ஒரே மாதிரியான மேற்பரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சாளர்கள் தங்கள் லென்த்தில் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் மிகையான அல்லது மிகக் குறுகிய எதையும் பேட்ஸ்மேன்கள் சமாளிக்க முடியும், ஏனெனில் பந்து பேட்டில் நன்றாக படும்படியாக வரும், குறிப்பாக ஓவர்-பிட்ச் செய்யப்படும்போது பந்து பேட்டில் மாட்டி பறக்க வாய்ப்பு அதிகம்.
கேகேஆரை இதே மைதானத்தில் எளிதாக வீழ்த்தியது பஞ்சாப். எனவே பழக்கப்பட்ட மைதானமாக இருப்பதால் ஆர்சிபி வீரர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
நேருக்கு நேர்
இதுவரை இரு அணிகளும் 34 மேட்ச்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 18 மேட்ச்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 16 மேட்ச்களில் ஆர்சிபியும் ஜெயித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச பிளேயிங் லெவன்
பிரியான்ஷ் ஆர்யா, நேஹால் வதேரா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ் / கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், ஹர்ப்ரீத் ப்ரார், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
இம்பேக்ட் பிளேயர்: பிரப்சிம்ரன் சிங்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச பிளேயிங் லெவன்
பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்
இம்பேக்ட் பிளேயர்: தேவ்தத் பாடிக்கல் / மனோஜ் பந்தேஜ்